states

img

கோமியம் குடித்தால் மட்டுமே நவராத்திரி நிகழ்ச்சிக்கு அனுமதி!

இந்தூர்,அக்.01- கோமியம் குடிப்பவர்களுக்கு மட்டுமே நவராத்திரி விழாவில் அனுமதி என்று இந்தூர் மாவட்ட பா.ஜ.க நிர்வாகி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூர் மாவட்டத்தில் நடைபெறவிருக்கும் நவராத்திரி விழாவான கார்பா நிகழ்ச்சிக்குப் பக்தர்கள் மாட்டுக் கோமியத்தைக் குடித்தால் மட்டுமே நிகழ்ச்சிக்கு அனுமதிக்கப்படுவர், உண்மையான இந்து கண்டிப்பாக இதை எதிர்க்க மாட்டார்கள், இந்துக்கள் தவிர வேறு யாரும் வந்துவிடகோடது என்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனச்  செய்தியாளர்களிடம் கூறிய இந்தூர் மாவட்ட பா.ஜ.க தலைவர் சிண்டு வர்மாவு கூறியுள்ளார்.
வேறு மதத்தினர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக் கூடாது என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் செய்தியாளர்களிடம் அவர் கூறியதற்குப் பலரும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.